மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

கொலை வாளினை எடடா! தமிழா!

மையத்தில் பேராய காங்கிரசு கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பெரியாரின் கொள்கைகளுக்கு காயடிக்கும், மக்களை தேர்ந்த ஏமாளிகளாக்கும் திமுகவின் ஆட்சி. மக்களுக்கு இலவசங்களை கொடுத்து, இனத்தை காட்டிக் கொடுத்து, வடநாட்டு பனியாக்களிடம் தமிழனின் வாழ்வுரிமையை பறித்து கொடுத்து, லஞ்சத்தை கூட்டிக்கொடுக்கும் கூட்டத்திடம் இனமானத்தை விட்டுக்கொடுத்து………….கொலைக்கார காங்கிரசின் கையிடம் கள்ள மௌனத்தோடு கள்ள உறவு கொண்டு மீண்டும் வருகிறது அதே கூட்டம், ஒட்டுச்சேர்க்க…………

தமிழர்கள் முட்டாள்கள் ரொம்ப நல்லவர்கள்,எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது போல நடிப்பார்கள்………என்ற ரீதியில் உலகத் தமிழ் மாநாடு…..இன்றைய சூழ்நிலையில் அந்த மாநாட்டை நிறுத்த முடியாவிட்டாலும்……தோழர்களே உங்கள் கோபத்தை தணித்து கொள்ளாதீர்கள்….பாவேந்தனின் வரிகளில் இருக்கும் செஞ்சினத்தை சிந்தைக்கு ஏற்றுங்கள். நாளை நம் நாள் என்று கனியும் வரை இளைஞர்களிடம் உங்கள் நியாயமான சினத்தை பரப்புங்கள்………..

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனது தாய்மிக

உயிர்வாதை யடைகிறாள்;

உதவாதினி ஒரு தாமதம் உடனே

விழி தமிழா!

கலையேவளர்! தொழில் மேவிடு!

கவிதைபுணை தமிழா!

கடலேநிகர் படை சேர்கடு

விடநேர்கரு விகள் சேர்!

நிலமேஉழு! நவதானிய

நிறையூதியம் அடைவாய்;

நீதிநூல்விளை! உயிர் நூல் உரை

நிசநூல் மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம் வானிலும்

அணி மாளிகை ரதமே

அவைஏறிடும் விதமேயுன

ததிகரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடாமிகு

கொடியோர்செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே உயர்

குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி

சரிநீதி யுதவுவாய்!

சமமேபொருள் ஜனநாயகம்

எனவே முரசரைவாய்!

இலையே உண விலையே கதி

இலையே எனும் எளிமை

இனிமேலிலை எனவே முர

சறைவாய் முரசறைவாய்!

September 24, 2009 Posted by | ஈழம், தமிழ், பாரதிதாசன், பெரியார், விடுதலை | 2 Comments

காஷ்மீர்

எங்கு விடுதலை போராட்டம் நிகழ்ந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது, தமிழர்களின் தார்மீகக் கடமை…..

கசப்பான இத்தனை அவலங்களுக்கு பிறகு நமக்கு இந்த விழிப்புணர்வு தேவை…

விடுதலைப்போராளிகள் ஆதிக்க-ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரட்டுவது, தமிழர்களின் கடமையும் கூட, நம் விடுதலையும் இதில் அடங்கி இருக்கிறது…..

ஈழப்போராட்டத்தை நசுக்கிய இந்தியா, சீன மற்றும் வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்தார்களா?என்பதற்கான இணைப்பு ஏதும் இருந்தால் தோழர்கள் இந்த பின்னூட்டத்தில் சேர்த்திடவும்…………..

August 17, 2009 Posted by | காசுமீர், விடுதலை | Leave a comment