மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

(சுயமரியாதையுள்ள) தமிழர்களுடைய வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம்.-இந்தியாவின் குடியரசு தின விழா

26 சனவரி, 1950 இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல், போனால் போகட்டும் என்பதுபோல் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. (சாதி ஒழிக்கப்பட்டால் இந்து மதத்திற்கு இங்கு வேலை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?) . இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டபிறகும் இதை பற்றியெல்லாம் பேசி பழமைவாதியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களானால், நீங்கள் நானும் அடிமையாக உருவாக்கப்பட்டு


இன்று இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அடிமைகளாக திரிவதற்கு இவைதான் காரணிகள் என்று சொல்லத் தோன்றுகிறது.

இன்று பேச்சுரிமை இருப்பதாக கூறப்படும் இந்தியாவின் நிலை என்ன?எந்த உரிமையாக இருந்தாலும் அரசுக்கு ஒடுக்குவதற்கு உரிமை உள்ளது என்பதுதானே நிலை!


ஈழத்தில் தமிழன் என்பதற்காகவே கொல்லப்படுகிறான், நான் தமிழன் என்பதினாலேயே என்னுள்ளம் துடிக்கிறது குரல் கொடுக்கிறேன்.


இல்லை, இல்லை நீ தமிழன்என்பதற்காக குரல் கொடுக்கக் கூடாது. இப்படி நீ குரல் கொடுத்தால் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும்.


இந்தியாவை தூண்டாடும் முயற்சியாக கருதப்படும், கைது நடவடிக்கைகள் ஏற்படும், உங்கள் குரலை ஒடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம், என்றெல்லாம் அரசு பொறுக்கித்திண்ணிகள் குரல் கொடுக்கிறார்கள்.

சரி நான் குரல் கொடுக்கவில்லை? இந்திய அரசே நீ என்ன செய்யப்போகிறாய்? என்றால், கொஞ்சம் பொறுத்திரு, அங்கே இருக்கும் உன் தமிழன உறவுகளின் மொத்த உயிரையும் சிங்கள பேரினவாதம் விரைவில் துடைத்தெரிய நாங்கள் உதவி புரிகிறோம், அவர்கள் அங்கு உயிரோடு போராடிக் கொண்டிருந்தால்தானே நீ குரல் கொடுப்பாய், உனக்கு அந்த பிரச்சினையை நாங்கள் வைக்கமாட்டோம் , நீ வெகு காலம் துடித்து கொண்டிருக்க வேண்டாம் என்பது போல் இந்திய அரசு கொக்கறிக்கிறது, இங்குள்ள அரசியல்வாத, பிழைப்புவாத தமிழர்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு அச்சப்பட்டு, தமிழர்களை காட்டிக் கொடுக்கிறார்கள், அவன்(இந்திய பார்ப்பன, பனியா வடநாட்டுக் கும்பல்) குண்டுகளை கூட்டிக் கொடுக்கிறான்.

இவையெல்லாம் பார்த்து கொண்டு தமிழன் அமைதியாகவே இருக்க வேண்டும்,ஏனென்றால்

இந்தியா ஒரு மாபெரும் குடியரசு!

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு!!

சரி அப்படி என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது இந்தியா?


  • பல்வேறு சாதிகளாக, பிரிந்து கிடந்தாலும், மொழி, இன வேற்றுமைகள் இருந்தாலும் தீண்டாமைக் கொடுமைகளை தொடர்ந்து மாநில வேற்றுமைகள் இன்றி கடைபிடித்து வருகிறது.

    இந்த ஒடுக்குமுறைகளை ஒடுக்குவதற்கு துப்பில்லாமல் இந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒற்றுமை குலைக்கலாமா, நாம்.

  • கர்நாடகம், ஆந்திரா, கேரளம் போன்ற மாநிலங்கள் மொழிவாரியாக வெவ்வேறு மாநிலங்களாக வேறுபட்டு இருந்தாலும், ஒற்றுமையோடு தமிழகத்துக்கு குடிக்க நீர் தரமாட்டோம் என்ற வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றுகிறதே!

    இந்த ஒற்றுமையை பேணி காக்க உயர்நீதிமன்ற தீர்ப்பை கூட அமல்படுத்தாமல் திராணியற்று கிடக்கும் இந்திய அரசின் ஒற்றுமையை (அப்)பாவி தமிழர்களே குலைக்கலாமா?

  • இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகம் மட்டும் வருந்தும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஒற்றுமையாக மௌனம் காக்கும் வேற்று மாநில மக்களின் ஒற்றுமையை குலைக்கலாமா, தமிழர்களே?

தமிழனின் உணர்வு புரியாத நாடு தமிழனின் நாடுதான். ஏனென்றால், அப்படித்தான் தாளில்/சட்டபுத்தகத்தில் வரையறுக்கப்பட்டுவிட்டது, அப்படியிருக்க நீங்கள் இந்திய வல்லாதிக்க நாட்டை எதிர்க்கலாமா?

தமிழர்களே உங்களுக்கு ஒற்றுமையுணர்வு இல்லை, இந்தியா வல்லரசு நாடாக கனவு கண்டு கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் சாதாரண உங்கள் அற்ப தமிழ் உயிர்ளுக்காக குரல் கொடுக்கிறீர்களே இது எந்த விதத்தில் நியாயம், இந்தியாவின் வெளியுறவு/உள்ளுறவு கொள்கையே தமிழனின் எச்சில் இலைக்கு சமானமாக மதிப்பதுதான், இதை புரிந்து கொள்ளாமல் இந்திய வல்லரசு நாட்டை எதிர்க்கிறீர்களே?



சரி இந்தியா வல்லராசும் லட்சணத்தை கீழ் வரும் கட்டுரையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் என்ன கொடி ஏற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

.

செய்தி ரசம்

Related Article:

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!

India grows so does the Inflation – Don’t talk about Indians!!!

India is First always!!! The record breaking Three seconds

================================================

“59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” – ஓட்டுக்கட்சிகளின் சாதனை

நன்றி: இரும்பு

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

..

மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

டிசம்பர் “புதிய ஜனநாயகம்”

“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரையில் இருந்து


January 24, 2009 Posted by | இந்தியா, இந்து மதம், தமிழ், மொழி | 1 Comment

நீங்களெல்லாம் மனிதர்களா? உங்கள் சகோதரன் படும் துயரத்தை கேட்டும் அமைதியாக இருக்கும் நீங்கள் மனிதர்களாக இருக்க முடியுமா?

       “உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும் என்கிறார்கள்.

       ஆனால் மனிதனின் முகவரி சிரிப்பில் இல்லை கண்ணீரில் இருக்கிறது.

சக மனிதனின் துன்பத்திற்காகக் கண்ணீர் வடிப்பவனே தன்னை மனிதன் என்று நிரூபித்துக் கொள்கிறான்.

சக மனிதரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வது சமூகப் பண்பாடு.

இன்பத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வருவார்கள் ஏனெனில் அது பயனுள்ளது.

 துன்பத்தில் பங்கு கொள்வதுதான் உயர்ந்த பண்பாடு.

புன்னகையில் பங்கு கொள்ள வருபனல்லன், கண்ணீரை பகிர்ந்துகொள்ள வருபவனே உண்மையான நண்பன்.

 இந்த உலகம் வாழ்வது விண் மழையால் அல்ல, கண் மழையால்!

மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும். உண்மைதான்.

ஆனால், சக மனிதனின் துயரம் கண்டு சிலர் சிரிக்கிறார்களே அவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?

துன்பத்திலும் பணக்கார துன்பம்,ஏழைத் துன்பம் என்று பேதம் பாராட்டுகிறார்களே!

பணக்காரன் துன்பத்தில் பங்கு கொள்ள வரும் ஏழையின் துன்பத்தை ஏளனம் செய்கிறதே!(வலிந்து ஆதரவு தரும் இந்தியம் பேசும் பொறுக்கி நாய்கள் தமிழர்களை வஞ்சிக்கிறார்களே- மகிழ்நன்)



இந்த மனிதர்கள் எவ்வளவு கொடூரனமானவர்கள்! பிறர் அழுவதை பார்த்து சிரிப்பவர்கள், தாம் சிரிப்பதற்காக பிறரை அழ வைப்பவர்கள், மற்றவர்கள் கண்ணீரை வார்த்து தங்கள் புன்னகைகளை வளர்ப்பவர்கள், இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

மலர் தோட்டத்து பூக்களையும்…பனித்துளியையும் பார்த்த கவிஞர் அர்ஷ் மல்ஸியானி இப்படித்தான் எண்ணினார்,

பூக்களும் பனித்துளியும்….புன்னகை கண்ணீரும்…. மலர்த் தோட்டத்தில் மனித நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது.

 

பனித்துளியின் துக்கத்தை விசாரிக்கப்

பூவனத்தில் யார் இருக்கிறார்கள்?

பாவம்! இந்த ஏழை அழுதால்

அரும்புகள் சிரிக்கின்றன.

                                              –         அப்துல் ரகுமானின்

                                     மகரந்த சிறகு நூலிருந்து

January 3, 2009 Posted by | ஈழம், தமிழ், பெரியார், மொழி | Leave a comment

தமிழன் செத்தொழிவது மேல்

இராமன் வருவானா?

 இந்துத்துவ அடிவருடிகளே! ஒற்றை சீதையை காப்பாற்ற இலங்கை சென்று இராவணனையும்,இலங்கையும் அழித்த இராமன்.

 எங்கள்/உங்கள்(தமிழனாக இருந்தால்) உறவு இலங்கையில் அழிந்து இத்தருணத்தில் கொண்டிருக்கிறது. இராமன் வருவானா காப்பாற்ற?

 இராவணன் என்பதே கற்பனை கதாபாத்திரம்,   கற்பனை கதாபாத்திரத்தை கொன்ற இராமன் இன்னொரு பெரும் போலி,ஏமாற்று, பித்தலாட்ட, பகட்டுக் கற்பனை. அப்படியிருக்க அவன் எப்படி உங்கள் இன மக்களை காப்பாற்ற வருவான் என்று இந்துத்வவாதிகளே முணுமுணுப்பது கேட்கத்தான் செய்கிறது.

 அவன் கற்பனை கதாப்பாத்திரம் மட்டுமல்ல, எம் பண்பாட்டுக்கெதிரான பார்ப்பன புழுகுமூட்டை என்பது எனக்கு நன்றாக தெரியும்.

 ஆனால் என்ன செய்வது? என் உறவு அழியும் போது, இராமன் பேர் சொல்லி இன்னொருபுறம் (இராம-தாச பொறுக்கி) இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் (
ந்து தீவிர-வாத அரசியலு)க்கு துணை போகும் தமிழர்களை என்ன கேள்விகேட்பது. இத்தருணத்தை பயன்படுத்தியாவது, இது மாதிரி கேள்வி கேட்டாவது மதச்சாக்கடைக்குள்ளிருந்து இவர்களை விடுவிக்க மாட்டோமா? என்ற நப்பாசைதான்.

 ஏனென்றால்,ஈழத்தில் தன்னுடைய இருப்புக்காக, சுய மரியாதைக்காக போராடிக்கொண்டிருக்கும் மறத்தமிழர்கள் வாழும் இவ்வுலகில் தமிழகத்தில் மறவர்கள் என்றோ, கள்ளர்கள் என்றோ, கவுண்டர்கள் என்றோ, பிள்ளை என்றோ சாதி பெருமை பேசி, திமிரோடு, காட்டுவிலங்காண்டித்தனமான அணுகுமுறையால் இலங்கையைவிட அருகில் வாழும் பெருவாரியான சகோதரர்களை சேரிகளில் ஒதுக்கி வைத்து விட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க எந்த ஈனத்தமிழனுக்கும் அருகதையில்லை.

 தமிழர்களே தயவு செய்து இந்த தருணத்திலாவது தமிழணர்வு கொள்ளுங்கள், சாதி,மத பிடியற்று வாழுங்கள் அல்லது இலங்கையில் சிங்கள இனவெறி இராணுவம் எறியும் குண்டுகளில் ஏதாவதொன்றை தமிழகத்திலும் உள்வாங்கி செத்து மடியுங்கள். (சாதிக்கட்டமைப்பு தகர்க்கபடாமல் அழுத்தமாக இலங்கையில் இருந்தால் அங்குள்ள தமிழர்கள் வாழ்வது தேவையில்லாதது).

 சாதியோடு வாழும் தமிழன் வாழ்வதற்கு பதிலாக ஒருவன்கூட மீதியில்லாமல் செத்தொழிவது எவ்வளவோ மேல்.

November 4, 2008 Posted by | இந்து மதம், ஈழம், தமிழ், மொழி | Leave a comment

தீபாவளி தேவையா?

இத்தனை ஆண்டுகால அறிவியல் முன்னேற்றத்திற்கும் பின்னால்  நான் ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்றுகூட கேள்வி கேட்கத் தெரியாமல் நிற்கும் நம் இனச்சகோதரர்களின் அறிவை என்னவென்று சொல்வது? நம் இனச்சகோதரர்கள் ஈழத்தில் தினம், குண்டுகளுக்கு மடிந்து கொண்டிருக்கும் பொழுது ஆரிய, பார்ப்பன புழுகு பண்டிகை நம்க்கு தேவைதானா?

 

எவனோ கொலை செய்யப்பட்டதற்கு பலகாரம் செய்து கொண்டாடினால் நாம் மனிதர்கள், மனித நேயம் கொண்டவர்கள் என்று சொன்னால் உலகம் எள்ளி நகையாடாதா?எதிரி வீட்டில் இழவு விழுந்தால்கூட நகைப்பதும், மகிழ்ச்சி கொண்டாடுவதும் மனித பண்பும் ஆகுமா?

 

நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உளன்று கொண்டிருக்க அவர்களை மேலும் கடனாளியாக்கும் கொடிய வழக்கம் அல்லவா இந்த பண்டிகை கொண்டாடுவது.

 

பறவைகளுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளி கொண்டாத ஊர்கள் இந்நாட்டில்தானே உள்ளன?

 

வறுமையின் காரணமாக ஆண்டுக்கணக்கில் தீபாவளி கொண்டாடாமல் இருக்கும் ஊர்களும் இந்நாட்டில்தானே இருக்கின்றன?

 

இப்பண்டிகை கொண்டாட்டத்தினால், ஏற்கனவே விலைவாசி ஏற்றம் என்ற கொடிய நச்சால் நசிந்து போயிருக்கும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் மீண்டும் ஒருமுறை தம் குழந்தைகளின் முன்னால் தலைகுனிய நேரிடுகிறது என்பதை நாம் ஏன் நம் எண்ணத்தில் நிறுத்துவதில்லை. இப்படி எதை பற்றியும் கவலைப்படாமல், பண்டிகை கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் உங்களை போன்றவர்கள் நாட்டில் ஊழல், வறுமை, கொலை, குண்டுவெடிப்பு என எதை பற்றியும் வருத்தப்படுவதற்கு அருகதை இருக்கிறதா? நமக்கு மட்டும் ஏன் வருத்தங்கள் வருகின்றது என்று வருந்தக்கூட யோக்கியதை இருக்கிறதா? என்று கொஞ்சம் உங்கள் உள்ளத்தை கேட்டு பதில் காணுங்கள்.

 

இதே தொனியில் மக்களுக்காவே சிந்தித்து வாழ்ந்த மாபெரும் தலைவர் பெரியாரின் கூற்றையும், அவருடைய பேரன்பையும் இந்த கட்டுரையில் காணுங்கள்.

 

 

ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்பொருத்தமோ – சொல்லுவதானாலும்
தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? –
என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி(இன்றைய நிலையில் குறைந்தது 50 கோடிபேராவது கொண்டாடியிருப்பார்கள்) மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி(இன்றைய நிலையில் 100 கோடிக்கும்)ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த
10
கோடியும் அனாவசியமாய் – துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய
வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில்
வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள்,
சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த-சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

தந்தைபெரியார் – குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931

October 27, 2008 Posted by | இந்து மதம், கடவுள், தீபாவளி, பெரியார், மொழி | Leave a comment