மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

பாதிக்காதல் – மோதி விளையாடு

August 5, 2009 Posted by | காதல், பாடல் | Leave a comment

நான் எம்மாத்திரம்

நீ கண்ணாடி முன் நின்றால்,

நிழலை உள் வாங்கும்

கண்ணாடியே நிலை கொள்ளாது,

நான் எம்மாத்திரம்

April 8, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

நீ பிறந்த பொழுதுக்காய் காத்து நிற்கிறேன்

நீ பிறந்த பொழுது என்ன செய்து

கொண்டிருந்தேன் தெரியாது,

ஆனால், இன்று நீ பிறந்த பொழுதுக்காய்

காத்து நிற்கிறேன், உனக்கு வாழ்த்து சொல்லும்

நொடிக்கு வாழ்த்து சொல்ல…………

April 8, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

எப்பொழுது கடக்கும் என்று

உன்னோடு வாழ்ந்து களிக்கும்

பொழுதுகளை பொருள்படுத்தி விடுகின்றன,

உனக்காக காத்திருக்கும் பொழுதுகள்,

உன்னை அழகுபடுத்தி விடுகின்றன,

அதனால்தான் காத்திருக்கிறேன்,

நொடிக்கடக்க காத்து கிடக்கும்,

நிமிட முள் போல, உனக்கு வாழ்த்து

சொல்லும் நொடியை கடிகார முள்

எப்பொழுது கடக்கும் என்று

April 8, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

காதலே உன்னை தேடிக் கொண்டிருக்கிறது

காதல் தேடி உன்னை வந்தடைந்த நான்,

தன் உண்மை முகவரியும், முகமும் அறிய

காதலே உன்னை தேடிக் கொண்டிருக்கிறது !

என்பதை பின்புதான் தெளிந்து கொண்டேன்.

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

நான் இவளுக்காக மட்டும் வந்தேன்





உன்னிடமிருந்துதான் கவிதை வருமா?

என்று பிழையாக சினம் கொண்டேன்,

என் பிழைதிருத்தி அதட்டி

கவிதை சொன்னது,

நான் இவளுக்காக மட்டும் வந்தேன். என்று

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

இப்படி சிணுங்கும் பெண்ணா?

நீ சிணுங்கும் வேளைகளில்

சிலிர்த்து போகும் உள்ளம்,

சிரித்துக் கொள்கிறது, இப்படி

சிணுங்கும் பெண்ணா, உள்ளம்

அதிர, அதிர ஒடி வந்து, உள்ளமெல்லாம்

நிறைந்தவள் என்று!

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

தாய்மை சுரக்கும் ஆணாய்

ஆணாக பிறப்பதும்,

பெண்ணாக பிறப்பதும்,

இயற்கையின் கையில்,

அறிவியல் கற்றுத்தந்திருந்தது,

ஆனால், உன் காதல், தாய்மை

சுரக்கும் ஆணாய் வாழக் கற்று

தந்திருக்கிறது

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

நீ கவலைப்படுகிறாய் , நான் மகிழ்ச்சியடைகிறேன்

உன்னை துரத்தி கொண்டு

வரும் இளைஞர்களை பற்றி

கவலைப்படுகிறாய் நீ, என்னை

துரத்திக் கொண்டு வரும்

உன் நினைவுகளை கண்டு

மகிழ்ச்சியடைகிறேன், நான்.

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

அழையா விருந்தாளியாய்………….

அழையா விருந்தாளியாய்,

என் தனிமை கலைக்க வரும் நபர்களை

கண்டால் எனக்கு சினம் பொத்து

கொண்டுதான் வரும், ஏனென்றால்

என் தனிமை என்பது

மற்றவை கலைத்து உன் நினைவுகளை

மட்டுமே வரவு வைத்த தருணம்.

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment