மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

நியுயார்க்கிலிருந்து மிரட்டல்

உலகத்தமிழ் மாநாட்டிற்கு நியுயார்க் தமிழ்ச்சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், தங்களுடைய கருத்தை மின்னஞ்சல்(nytamilsangham@gmail.com) மூலமாகவோ, தொலைப்பேசி((718)-969-1310)) மூலமாகவோ கருத்தை பதிவு செய்யுமாறு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்தது.

கூடவே இந்த இணைப்பும் சேர்ந்தே வந்தது.

http://www.facebook.com/n/?inbox/readmessage.php&t=1144658613759&mid=124459eG26ac0379G2a26b64G0

நானும் என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் கீழ்க்கண்டவாறு செப்.23 ஆம் தேதி

உங்களின் உலகத்தமிழ் மாநாட்டிற்கான ஆதரவுக்கு நன்றி………..

இப்படியே மாநாடு நடத்தி தமிழர்களுக்கு இருக்கும் மீதி உணர்வுகளையும் அழித்து விடுங்கள்….

உங்கள் வரலாற்று துரோகங்களுக்கு உளப்பூர்வமான நன்றி

அன்பும் ,பகுத்தறிவுடனும்.

மகிழ்நன்.

+919769137032

தாராவி, மும்பை

http://periyaryouth.blogspot.com

https://makizhnan.wordpress.com

http://kayalmakizhnan.blogspot.com

http://scientifictamil.blogspot.com

http://vizhithezhuiyakkam.blogspot.com

நேற்று அதிகாலை செப்.2509 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி காலை 7:32 மணிக்கு +6146545155 என்ற எண்ணிலிருந்து 06:58 விநாடிகள் ஒரே மிரட்டல்.

சொற்கள் அத்தனையும் முழுமையாக நினைவிலில்லை,ஏனென்றால் நான் அதை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. ஆனால், ஒருச்சில நினைவில் இருக்கின்றன….அவற்றை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சைபர் கிரைமில் உள்ளே தள்ளிடுவேன்.

மும்பை கமிசனரை எனக்கு தெரியும்

புலி ஆதரவாளர்னு முத்திரை குத்திடுவேன்.

அஞ்சு வருஷம் உள்ளே தள்ளிடுவேன்.

உன்னை காப்பாத்த பெரியாரும் வரமாட்டார், வீரமணியும் வரமாட்டார்.

கருணாநிதி மேல அவ்வளவு கோபம் இருந்தால், குண்ட கட்டிக்கிட்டு விழுந்து அவரை கொல்ல வேண்டியதுதானே.

பார்ப்பான், பார்ப்பான்னு திட்டி எழுதிறியே உங்க ஆட்கள்தானே ஆட்சியிலே இருக்கிறாங்க, ஏன் இலங்கை மக்களை காப்பாத்த முடியலை.

இவ்வளவையும் கேட்டுவிட்டு நான் கூறியதை…

உங்கள் கோபம் தணிவதற்காகத்தான் இவ்வளவும் கேட்டுக் கொண்டேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். நான் வீரமணி ஆதரவாளர்னு யார் சொன்னா….?”

எவ்வளவு நகைச்சுவை பார்த்தீர்களா?பார்ப்பான்னு நான் என்றோ திட்டி எழுதியதை நினைவில் வைத்து, பார்ப்பான் என்றே குறிப்பிடாது எழுதிய மின்னஞ்சலில் கிடைத்த எண்ணில் தொடர்பு கொண்டு மிரட்டுவது என்ன துணிவு, அறிவுடமை? பார்ப்பனீயத்தை கடைப்பிடிக்காதவனுக்கு பார்ப்பான் என்ற சொல் ஏன் குத்தி குடைய வேண்டும். பார்ப்பனீயத்தை அப்படித்தான் கடைபிடிப்பேன் என்றால் , நானும் அப்படித்தான் இன்னும் உறுதியோடு பார்ப்பான் என்றே எழுதுவேன். பார்ப்பனீயம் வீழும் வரை எழுதுவேன், களமாடுவேன்.

அதோடு புலி ஆதரவாளர் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடுவானாம், நான் புலி ஆதரவாளர் என்று இவருக்கு எப்படி தெரியும், நான் ஈழத்தமிழ் மக்களை ஆதரிக்கிறேன், அவர்கள் புலிகளை ஆதரித்தால் நான் என்ன செய்வது. A=B=C மாதிரி ஆகின்றது, நான் என் செய்வது.

எம் சகோதரர்கள் தானாகவா ஆயுதமேந்த தொடங்கினார்களா என்ன ? ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள், சிங்கள இன வெறியால் ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள்.என் சகோதரர்கள் சொந்த நாட்டில் உரிமையோடு மகிழ்ச்சியோடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காகத்தான் ஆயுதமேந்தினார்கள். தம் வாழ்வின் அமைதிக்காகத்தான் ஆயுமேந்தினார்கள். புலிகள் தவறிழைத்திருக்கலாம் ஆனால் அதை சுட்டிக்காட்ட இந்திய வல்லாதிக்கத்திற்கு தகுதி கிடையாது.

இன்னும் குறிப்பாக எந்த பார்ப்பன பண்டாரத்தின் வழித்தோன்றல்களுக்கும் தகுதி கிடையாது. பார்ப்பன வழித்தோன்றல்கள் தங்கள் முன்னோர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது செய்த கொடுமைகளை வரலாற்றின் பக்கங்களில் புரட்டி பார்த்து தெரிந்து கொண்டால் தாங்கள் செய்த பிழையின் தன்மையும் கணமும் புரிய வரும். இன்றும் இடஒதுக்கீட்டினை தங்களின் முன்னோர்கள் செய்த தவற்றை திருத்தி கொள்ளும் வாய்ப்பாக பார்க்காமல் இடஒதுக்கீட்டை பார்ப்பன பண்டாரங்கள் புலிகளை பற்றியோ ஈழத்தை பற்றியோ விமர்சிக்க தகுதியற்றவர்கள்…

புலிகளின் சகோதரர்கள், ஈழத்து உறவுகள் விமர்சிக்கட்டும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது…தின்று கொழுத்த கூட்டம் கண்டிப்பாக விமர்சிக்க கூடாது

இங்கு ஆட்சி செய்பவன் எல்லாம் ஊரை அடித்து உலையில் போடும் கொள்ளைக்காரர்கள். இவர்கள் தாம் மடிந்தாலும் திருந்த போவதில்லை. அப்படியிருக்க புலிகளை மட்டுமல்ல, சாக்கடையில் ஓடும் எலியை கூட இவர்கள் விமர்சித்தால் பொறுத்துக் கொள்ளாது.

எம் சகோதரர்களை நாங்கள் விமர்சிப்போம், அவர்களிடம் பிழைகள் இருந்தால் நாங்கள் திருத்துவோம், முடிந்தால் மென்மையாக, இல்லையென்றால் உரிமையோடு வன்மையாக சொல்வோம். எங்களுக்கு எவனும் கற்றுத்தர தேவையில்லை. மிரட்டுபுவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கும் சு………..சாமியையும், சோ…….சாமியையும் மிரட்டட்டும்….

நாங்கள் பெரியார் விதைத்த விதைகள், இம்மண்ணுக்காக மக்களுக்காக போராட களம் வந்து விட்டோம்,. இந்த சிறு பிள்ளைத்தனமாக அழுமூஞ்சி மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டோம். மாறாக, மிரட்டல்கள் எங்களை கூர்தீட்டும். எங்களை பொருத்தவரை நாங்கள் மனிதர்கள் புலிகள் இல்லை, தமிழர்களுக்காக ஈழத்தில் தீரத்தோடு போராடிய இயக்கங்களுள் முதன்மையான இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த இயக்கதில் மனிதர்கள் இருந்தார்கள், தங்களுடைய வாழ்வை தியாகம் செய்து தம் மண்ணுக்காக போராடினார்கள்.

முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவன் சிங்களவன், பின்னர்தான் புலிகள். அடித்தவனுக்கு அடிவாங்கியவனுக்கு அடிப்படை வேறுபாடு உண்டல்லவா?”

சேகுவேரா கூறியது போல உலகத்தில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும், என் உள்ளம் துடிக்கும்,ஏனென்றால் நான் சே வின் தோழன்.

சிறை என்னை நான்கு சுவற்றுக்குள் கைது செய்யலாம், வரலாறு என்னை விடுதலை செய்யும்(பிடல் காஸ்ட்ரோ), என் கருத்தை விடுதலை செய்யும்.

புலிகளை ஆதரிக்கிறேனா? என்றால் ஆதரிக்கவில்லை, பாதுகாக்க வில்லை என்றால்தான் அது குற்றம். ஏனென்றால், அது இந்தியாவின் தேசிய விலங்கு.

எழுத்துப் பிழைகள் இருக்கலாம், இருந்தால் மன்னிக்கவும் அவசரத்தில்எழுதியது

September 26, 2009 Posted by | ஈழம், உலகத்தமிழ், கருணாநிதி, தமிழ், மாநாடு, மிரட்டல் | 1 Comment

இந்திய உளவு நிறுவனங்களின் சதி பற்றி கருணாநிதி

ரா உளவு நிறுவனம் தான் இந்த குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும்  மாநில  அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே ராவின் நோக்கமாக இருக்கிறது, எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத்தமிழ் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு ரா தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், இடையே செய்து கொண்டிருக்கிறது

  Sri Karunanithi, on 8th May 1990, on the floor of the assembly is reported to have accused the Research and Analysis Wing(RAW) of trying to create a rift between the Centre and the State appealed to the Prime Minister to take appropriate action. He alleged that the RAW which was responsible in the past for creating Divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State

 (ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை)

 என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார், தமிழகத்தின் முதல்வர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது!

தமிழக முதல்வர் கலைஞர் கருணநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குபிரகுதான்  தமிழ்நாட்டில் பதநாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.

 உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ரா உளவு நிறுவனம் தான்!

 உளவு நிறுவன மிரட்டலுக்கு திமுக பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி,எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி  திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

 அதே உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் 2007-லும் தனது திருவிளையாடல்களை துவக்கி இருக்கிறது.

 உளவு நிறுவனங்களோடு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்து, அவர்களின் சூழ்ச்சி பொறிகளை தெளிவாக புரிந்து வைத்துள்ள திமுக ஆட்சி, பொய்மை பிரச்சாரத்துக்கு துணை போய் விடக்கூடாதுஎன்பதே நமது வேண்டுகோள்.

 நன்றி :

பக்கம்:64-65

ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி

ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.

வெளியீடு:பெரியார் திராவிடர் கழகம்

முதல் பதிப்பு:2007

November 13, 2008 Posted by | ஈழம், கருணாநிதி, புலிகள் | 1 Comment